கல்முனை கீரின் பீல்ட் பகுதியில் காட்டு யானை அட்டகாசம் ; பாடசாலை சுற்று வேலி , சிறுவர் பூங்கா சுற்று வேலி மற்றும் மரங்ககள் சேதம்..!



எம். என். எம். அப்ராஸ்-
ம்பாறை மாவட்டத்தில் அண்மைக்காமாக காட்டு யானைகளின் அட்டகாசம் அதிகரித்து வருகிறது இதனால்பொது மக்கள் மிகவும்

செளகரியங்களுக்கு உள்ளாவதுடன் யானைகளினால் பொது மக்களின் உடமைகளுக்கும் சேதம் விளைவித்தும் வருவதை காண முடிகிறது .
இந்நிலையில் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காககல்முனை பிரதேசத்தில்

அமைக்கப்பட்ட தொடர் மாடி மக்கள் குடியிருப்பு பகுதியில் இன்று (20) அதிகாலை காட்டு யானைகள் உள்நுழைந்து அங்கு அமையப் பெற்றுள்ள கல்முனை ரோயல் வித்தியாலத்தின் சுற்றுபுற வேலியின் ஒரு பகுதியைசேதப்படுத்தியதுடன் பாடசாலை வளாகத்தில் நடாப்பட்டிருந்த மரங்கள் சிலவற்றையும் காட்டு யானைகள்சேதப் படுத்தியுள்ளதுடன் ,குறித்த குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவின் சுற்று வேலியின் ஒருபகுதியை உடைத்து சேதப் படுத்திய காட்டு யானைகள் குறித்த பகுதியில் வீடொன்றின் அருகில் நடப்பட்டவாழை மரங்களையும் துவம்சம் செய்துள்ளது.

அத்துடன் யானையினை விரட்டும் நடவடிக்கையில் அன்றை தினம் குடியிருப்பாளர்கள் ஈடுபட்டதாக தெரியவருகிறது
மேலும் இரவு வேளைகளில் பொது மக்கள் குடியிருப்பு பகுதியில் ஊடுருவும் காட்டு யானைகள் அயலிலுள்ள வயல் வெளிகளில் கடந்த சில நாட்களாக சஞ்சரித்து காணப்படும் நிலையில் யானைகள் குறித்த குடியிருப்பு பகுதியில் வந்து சேதம் விளைவித்ததாக மக்கள் தெரிவித்தனர்.
குறிப்பாக இரவு நேரங்களில் குறித்த குடியிருப்பு பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தரும் நிலையில்உள்ளதால் இதனால் மிகவும் அச்ச நிலையில் தாம் வசித்து வருவதாக பொது மக்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை கல்முனை மாநகர சபையினால் சேமிக்கப்படும் திண்மக்கழிவுகள் கல்முனை கீறின் பில்ட்குடியிருப்பு பகுதியை அண்மித்த வயல் வெளி பகுதியில் மொத்தமாக கொட்டப்பட்டு சேமிக்கப்பட்டு அகற்றல்நடவடிக்கை இடம்பெற்று வரும் நிலையில் குறித்த திண்மக்கழிவினை உண்பதற்காய் காட்டு யானைகள்வருகை தருவதாக குடியிருப்பாளர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
யானைகளின் வருகையினை மக்கள் குடியிருப்பு பகுதிகளில் வருகை தருவதை உடனடியாக கட்டுப் கட்டுப்படுத்துமாறு பொது மக்கள் உரிய அதிகாரிகள் மற்றும் பிரதேச அரசியல்வாதிகளிடம்.
கோரிக்கை விடுக்கின்றனர்.

காட்டு யானைகள் அயலிலுள்ள வயல் வெளிகளில் இன்றைய தினம் (21/10/2021)சஞ்சரித்து உள்ளதை காண முடிந்தது.

இதேவேளை கடந்த சில நாட்களுக்கு முன்னர் காரைதீவு ,மாவடிப்பள்ளி நற்பிட்டிமுனை , சாய்ந்தமருது , ஆகிய பிரதேசங்களில் மக்கள் வாழும் பகுதிகளில் காட்டு யானைகள் வருகை தந்து உடமைகளுக்க்கு சேதம்விளைவித்தமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :