காரைதீவில் 13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் விடுக்கப்பட்டது.



நூருல் ஹுதா உமர்-
ல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணனின் வழிகாட்டலில் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீரின் தலைமையில் அலுவலக மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர், பொது சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், நுளம்பு கள தடுப்பு பிரிவினர்கள் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள், பல் தேவை செயலணியினர் இணைந்து காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 918 வீடுகளில் டெங்கு கள பரிசோதனை செய்யப்பட்டது. இதில் 13 நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையும், 27 நபர்களுக்கு சிவப்பு அறிவித்தலும் வழங்கப்பட்டது.

எனவே நுளம்பு பெருகுவதனை குறைக்கவும், சுகாதார வைத்திய அதிகாரி பகுதியில் டெங்கு பரவுவதைத் தடுக்கவும் தினமும் 20 நிமிடங்கள் சுற்றுச்சூழலைப் தண்ணீர் தேங்கி நிற்கக் கூடிய பொருட்களை அகற்றி விடுமாறு அல்லது அழித்து விடுமாறும் பொதுமக்கள் அனைவரும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக டெங்கு ஒழிப்பு பிரிவினருக்கு உதவ தயாராக இருக்குமாறும் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் தஸ்ஸீமா வசீர் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :