வருமானம் குறைந்த திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த192 பேருக்கு அரச நியமனம் வழங்கல்



எம்.ஏ.முகமட்-
சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைவாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வருமானம் குறைந்த க.பொ.த.சாதாரன தரம் சித்தியடைய தவறிய திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 192 பேருக்கு அரச நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (31)திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

இதற்கிணைவாக கந்தளாய் நகர சபை மண்டபத்தில் கந்தளாய்,சேருவல மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை சேர்ந்த 81 பேருக்கும் இந்நியமனங்கள் கந்தளாய் நகர மண்டபத்தில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக்,மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,அரசியல் பிரமுகர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் நியமனதாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :