சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப்பிரகடனத்திற்கமைவாக ஒரு இலட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் திட்டத்தில் வருமானம் குறைந்த க.பொ.த.சாதாரன தரம் சித்தியடைய தவறிய திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த 192 பேருக்கு அரச நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று (31)திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்பு குழு தலைவருமாகிய கபில அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.
இதற்கிணைவாக கந்தளாய் நகர சபை மண்டபத்தில் கந்தளாய்,சேருவல மற்றும் வெருகல் ஆகிய பிரதேச செயலகப்பிரிவுகளை சேர்ந்த 81 பேருக்கும் இந்நியமனங்கள் கந்தளாய் நகர மண்டபத்தில் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக்,மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,அரசியல் பிரமுகர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் நியமனதாரிகளும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தெளபீக்,மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள,அரசியல் பிரமுகர்கள்,பிரதேச செயலாளர்கள் மற்றும் நியமனதாரிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment