இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக டவர் நிதியப் பணிப்பாளர் சபை உறுப்பினரும் புரவலர் புத்தகப் பூங்கா ஸ்தாபகருமான புரவலர் ஹாஷீம் உமர் கலந்து சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் நாடகம், ஆடல் பாடல், பரதநாட்டியம், நடிப்புத் துறைகளில் பயிற்சி பெற்று போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பணப்பரிசில்களும் சான்றிதழ்கழ்களும் வழங்கி வைக்கப்ட்டன அத்துடன் 2020ஆம் ஆண்டின் அரச கலாபூசன விருது பெற்ற கவிஞர் மேமன்கவி, பிரபல பாடகர் என் ரகுநாதன் ஆகிய இருவரையும் பொன்னாடை போற்றி பொற்கிளியும் சான்றிதழும் வழங்கி கௌரவிக்கப்பட்டார்கள்.
மேலும் இந்நிகழ்வில் கட்டுரைப் போட்டியில் முதலாம் பரிசு கண்டி தொல்தோட்டையைச் சேர்ந்த றிஸ்மியா ஹமீத், இரண்டாம் பரிசினை கொழும்பு பாமன்கடையைச் சோந்த சஜனி மூன்றாம் பரிசு மட்டக்களப்பு சேர்ந்த யோ. மோகனதாசன் ஆகியோர்கள் பெற்றுக் கொண்டார்கள்.
0 comments :
Post a Comment