பிரதேச அபிவிருத்தி வங்கியின் 29ஆவது ஆண்டு நிறைவு விழா நிகழ்வு !



நூருள் ஹுதா உமர்-
பிரதேச அபிவிருத்தி வங்கியின் அக்கரைப்பற்று கிளை தனது 29ஆவது ஆண்டு நிறைவு விழாவை நேற்று வெள்ளிக்கிழமை (12) வைபக ரீதியாக கிளை முகாமையாளர் எஸ்.எச்.எம். இப்ராகிம் தலைமையில் கொண்டாடியது.
இதன்போது கோவிட் 19 இனால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்கு சலுகை அடிப்படையில் தெங்கு அபிவிருத்தி, விவசாயம், பண்னைவளர்ப்பு, கடற்தொழில் மற்றும் வியாபார அபிவிருத்திக்கடன் வழங்கப்பட்டதுடன் வாடிக்கையாளர்களின் சேமிப்புகளும் ஏற்றுகொள்ளப்பட்டது.

இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பிரதேச அபிவிருத்தி வங்கியின்கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களின் பிராந்திய பொது முகாமையாளர் பீ. ஜி.டவ்ளியூ. அத்துல குமார கலந்து கொண்டதுடன் வங்கி உத்தியோகத்தர்கள், வாடிக்கையாளர்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :