திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வலைப்பந்து கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக அணியினர் 2ம் இடத்தினை தனதாக்கினர்



ஹஸ்பர் ஏ ஹலீம்-
2021 ஆம் ஆண்டு திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் வலைப்பந்து கிண்ணத்துக்கான சுற்றுப் போட்டி (19) திருகோணமலை மக்கேசர் உள்ளக விளையாட்டரங்கில் நடைபெற்றது

பிரதம அதிதியாக மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

ஏழு அணிகள் பங்குபற்றிய இப்போட்டித்தொடரின் இரண்டாம் இடத்தினை தம்பலகாமம் பிரதேச செயலக, அணியினர் தனதாக்கிக் கொண்டனர்.

இதன் போது குறித்த அணியினருக்கு கேடயம் வழங்கி வைக்கப்பட்டது.

தம்பலகாமம் பிரதேச செயலாளர் ஜெ.ஸ்ரீபதி அவர்களின் வழிகாட்டலின் கீழ் கடந்த ஒரு மாத காலமாக போட்டிக்கான தயார்படுத்தலை திறம்பட பயிற்சியில் இவ் அணியினர் ஈடுபட்டு வந்துள்ளனர். இறுதிப் போட்டியில் தம்பலகாமம் பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் இரா.பிரசாந்தன், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் ஐ.முஜீப் ,சக உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :