அண்மையில் இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 05 வது உபவேந்தராக இளவயதில் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகத்தின் கலை, கலாசார பீடத்தின் சமூகவியல் துறையின் முதன்நிலை பழைய மாணவரும், சாய்ந்தமருதில் இருந்து முதற்தடவையாக உபவேந்தர் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டவருமான பேராசிரியர். கலாநிதி றமீஸ் அபூபக்கர் அவர்களை சொந்த ஊர் மக்கள் வாழ்த்தி வரவேற்கும் நிகழ்வு நாளை (18.11.2021) வியாழக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி மைமூனா அஹமட் தலைமையில் நடைபெறவுள்ளது.
செராண்டிப் இளைஞர் பவுண்டேஷனின் நெறிப்படுத்தலில் ஈஸ்டர்ன் காஸ்ட் மேனேஜ்மென்ட் (பிரைவேட்) லிமிடெட், சம்மாந்துறை நபீர் பவுண்டேஷன் மற்றும் சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபம் ஆகியவற்றின் அனுசரணையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் சாய்ந்தமருதின் முக்கிய சமூக நிறுவனங்கள் பலதும் கலந்துகொண்டு பேராசிரியர் கலாநிதி றமீஸ் அபூபக்கரை பாராட்டி கௌரவிக்கவுள்ளனர்.
0 comments :
Post a Comment