திருகோணமலை தம்பலாகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வன ஜீவராசி பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
கல்மெட்டியாவ, உல்பத்வெவ என்ற பகுதியிலே இவ்வாறு இரண்டு யானைகளும் இறந்துள்ளதாக வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இந்த யானைகள் நேற்றிரவு(10) இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரண்டு யானைகளும் எட்டு வயதுக்கு மேற்பட்டவையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கின்றனர்.
மின்சாரம் தாக்கி இறந்திருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவிப்பதோடு,பரிசோதனையின் பின்னேரே தெரியவரும் எனவும் வன ஜீவராசி அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தம்பலாகாமம் பொலிஸார் மற்றும் வன ஜீவராசி அதிகாரிகளும் முன்னெடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment