ஆறு மாத காலமாக சிறையில் அடைக்கப்பட்டு விடுதலையின் பின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன் திருகோணமலை மாவட்டத்துக்கு முதன் முறையாக விஜயம் செய்தார்.
குறித்த விஜயமானது நேற்று(06)இடம் பெற்றதுடன் மக்கள் சந்திப்பிலும் ஈடுபட்டார் இதன் போது மக்கள் உற்சாக வரவேற்பளித்தனர் .முன்னால் பிரதியமைச்சரும் மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளருமான அப்துல் மஹ்ரூப் தலைமையில் இடம் பெற்ற இம் மக்கள் சந்திப்பில் கந்தளாய்,முள்ளிப்பொத்தானை,புல்மோட்டை,புடவைக்கட்டு, குச்சவெளி,இறக்கக்கண்டி,மூதூர்,தோப்பூர்,கிண்ணியா பகுதி மக்கள் றிசாதை உற்சாகவரவேற்பளித்ததுடன் பள்ளிவாயல்களில் விசேட துஆ பிரார்த்தனையும் இடம் பெற்றது.
0 comments :
Post a Comment