இலங்கையின் சிரேஷ்ட இலக்கியவாதி டெனிசன் பெரேரா வாழ்நாளில் சேகரித்த நூல்கள் அடங்கிய நூலகத்தை வழங்கினார்.



கரீம் ஏ. மிஸ்காத்-
விலைமதிக்க முடியாத நூலகம் மக்கள் விடுதலை முன்னணியிடம் (JVP) டெனிசன் பெரேரா அவர்களால் அன்பளிப்புச் செய்யப்பட்டது.

இலங்கையின் சிரேஷ்ட இலக்கியவாதி டெனிசன் பெரேரா அவர்கள் சுமார் 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கையின் சிறுகதை, நாவல், மொழியாக்கம், விமர்சனத் துறைக்கு பெரும் பங்காற்றியவர். 'இலங்கை எழுத்தாளர் அமைப்பில்' நீண்ட காலம் தலைவராகப் பணியாற்றியவர்.

அவர் தனது வாழ்நாள் முழுதும் சேகரித்த விலைமதிக்க முடியாத நூல்கள் அடங்கிய நூலகத்தை நேற்று (2021.11.18) மக்கள் விடுதலை முன்னணிக்கு அன்பளிப்புச் செய்தார்.
சிறந்ததொரு சமுதாயத்தை உருவாக்குவதற்காக வருங்கால சந்ததியினர் பயன்படுத்துவதற்கு தனது நூலகத்தை மக்கள் விடுதலை முன்னனியிடம் அன்பளிப்புச் செய்திருந்தார்.
இந்நூலகக் கொடையைப் பொறுப்பேற்பதற்கு மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வா மற்றும் சிரேஷ்ட இலக்கியவாதிகள் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வு தொடர்பான தகவழ்களை ஹிஷாம் ஹுசைன் அவர்கள் தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :