பஸ்யாலை - கிரி உல்ல வீதியில் உள்ள தன்சலே வத்த பிரதேசத்தில், (08) மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாகவும், சிறு குழந்தை உட்பட மேலும் சிலர் காயமடைந்து, வத்துபிட்டிவலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், நிட்டம்புவ பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்விபத்தில் 47 வயதான சந்தன பெரேரா, 42 வயதான மானெல் பெரேரா ஆகியோர் மரணித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
பஸ்யாலை திசையிலிருந்து கிரி உல்ல திசை நோக்கிப் பயணித்த கண்டேனர் லொறி, முன்பாக வந்த வேன் மற்றும் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளில் மோதியுள்ளதாக, ஆரம்ப கட்ட விசாரணைகளிலிருந்து தெரிய வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.
கண்டேனர் வாகனம், நேருக்கு நேராக வேனுடன் மோதியதால் வேனின் ஜன்னல், கதவுகள் கழன்று வீசப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, இவ்விபத்தில் படுகாயமடைந்த சிறு குழந்தை, கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக, வத்துபிட்டிவலை ஆதார வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment