வீதி அபிவிருத்தி அதிகாரபையின் அக்கரைபற்று பிரதான பொறியியலாளர் அலுவலகத்தின், பிரதான பொறியியலாளராக பொறியியலாளர் தாமோதரம் சிவசுப்ரமணியம் பதவி உயர்வு!



வீதி அபிவிருத்தி அதிகாரபை அக்கரைபற்று, பிரதான பொறியியலாளர் அலுவலகத்தின் பிரதான பொறியியலாளராக பொறியியலாளர் தாமோதரம் சிவசுப்ரமணியம் அவர்கள் பதவி உயர்வு பெற்று 16.11.2021 திகதி மாகாண பணிப்பாளர் பொறியியலாளர் M.B. அலியார் அவர்களின் முன்னிலையில் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

இவர் 1997.01.13 திகதியில் இருந்து வீதி அபிவிருத்தி அதிகாரபையில் இணைந்து இரத்தினபுரி, மட்டக்களப்பு, அம்பாறை, கல்முனை மற்றும் கொழும்பு காரியாலயங்களில் பொறியியலாளராக கடமையாற்றியுள்ளார்.

மேலும் கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரபையில் நிறைவேற்று பொறியியலாளராக ஜூன் 2019 இருந்து 16.11.2021 கடமையாற்றியுள்ளார்.

இவர் ஆர்.கே.எம். வித்தியாலயம், வீரமுனையில் சாதாரண தரம் வரை கல்வி கற்று தனது உயர்தரத்தை சம்மாந்துறை மத்திய கல்லுரியில் கற்று பொறியியலாளராக தெரிவு செய்யப்பட்டார். தனது பொறியியலாளர் பட்டத்தை பேராதன பல்கலைக்கழகத்தில் பெற்றுக் கொண்டார்.

வீரமுனையை பிறப்பிடமாகவும் காலம் சென்ற அதிபர் தாமோதரம் மற்றும் செல்லம்மா தம்பதியினரின் சிரேஷ்ட புதல்வரும் காரைதீவைச் சேர்ந்த வைத்திய கலாநிதி ஜீவாராணியின் கணவரும் ஆவார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :