வாழைச்சேனையில் இரத்ததான முகாம்



எச்.எம்.எம்.பர்ஸான்-
வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் எதிர்வரும் (23) செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணி முதல் இரத்ததான முகாம் ஒன்று இடம்பெறவுள்ளதாக கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலக இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் தெரிவித்தார்.
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகம், பிரதேச இளைஞர் கழக சம்மேளனம், இளைஞர் பாராளுமன்றம் ஆகிவை ஒன்றிணைந்து குறித்த இரத்ததான முகாமை நடாத்தவுள்ளது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியில் நிலவும் குருதி தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் முகமாக இந்த இரத்ததானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
எனவே, குறித்த இரத்ததான முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட ஆண்கள், பெண்கள் என அனைவரும் கலந்து கொண்டு இரத்ததானம் செய்யலாம் என்று இளைஞர் சேவைகள் உத்தியோகத்தர் எஸ்.ஐ.எம்.பஷீல் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :