நிந்தவூர் இஸட்.ரீ.எம்.ஆஷிக் தங்க பதக்கத்தை சுவீகரித்து இலங்கை மெய்வல்லுனர் குழாமில் இடம்பிடிப்பு !



நூருல் ஹுதா உமர்-
லங்கை இராணுவத்தையும் கிழக்கு மாகாணத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி ஆண்களுக்கான பரிதி வட்டம் வீசுதலில் கலந்து கொண்ட நிந்தவூர் மதினா விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர் இஸட்.ரீ.எம்.ஆஷிக் 46.85 மீற்றர் தூரத்தை எறிந்து தங்க பதக்கத்தை சுவீகரித்து கொண்டார். இவ் வெற்றியின் மூலம் இலங்கை மெய்வல்லுனர் அவர் குழாமில் இடம்பிடித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டிற்கான 99 வது தேசிய மெய்வல்லுனர் சம்பியனாக இலங்கை மெய்வலுனர் அணிக்கு பொதுநலவாய விளையாட்டு போட்டிக்கான வீரர்களைத் தெரிவு செய்யும் தகுதிகாண் தெரிவு கடந்த சனிக்கிழமை (30)ம் திகதி கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெற்றது.

கொவிட் - 19 அசாதாரண சூழ்நிலையில் இவ்வெற்றியை பெற பயிற்சிகளை மேற்கொள்ள இலங்கை தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மைதான வசதிகளை ஏற்படுத்தி கொடுத்த இலங்கை தென்கிழக்கு பல்கலை கழகத்தின் உப வேந்தர் பேராசிரியர் ரமீஸ் அபூபக்கர், தென் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச்.ஏ.சத்தார் ஆகியோர்களுக்கு விஷேடமான நன்றிகளை தெரிவிக்கும் மதீனா விளையாட்டு கழகத்தினர் தான் பிறந்த மண்ணுக்கும் தாய் நாட்டுக்கும் பெருமையை ஈட்டி கொடுத்த வீரர் இஸட்.ரீ.எம்.ஆஷிக்கிற்கு பாரட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :