வாழைச்சேனை ஆயிஷா மகளிர் மகா வித்தியாலய மாணவிகள் பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.
இம்முறை க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதிய மாணவிகளே இவ்வாறு கதிரைகளை அன்பளிப்பு செய்துள்ளனர்.
பாடசாலை விஞ்ஞான ஆய்வு கூடத்திற்கு தேவைப்பாடாக இருந்த கதிரைகளை மாணவிகள் வழங்கியமைக்கும் அதிபர் எம்.ரீ.எம்.பரீட் நன்றிகளை தெரிவித்துள்ளார்.
அத்துடன், மாணவிகளை வழிப்படுத்திய வகுப்பாசிரியர்களான கே.ஆர்.எம்.இர்ஷாத் மற்றும் எம்.எப்.சிபானி ஆகியோருக்கும் அதிபர் பாராட்டுக்களை தெரிவித்தார்.
கதிரைகள் வழங்கும் இந்நிகழ்வில் அதிபர் எம்.ரீ.எம்.பரீட், பிரதி அதிபர் எஸ்.பாறூக் கான், ஆசிரியர்களான கே.ஆர்.எம்.இர்ஷாத், எம்.பி.ஜெமீல் மற்றும் மாணவிகள் பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment