மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாடலாவிய ரீதியில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு முதற்கட்டமாக செலுதப்பட்டு வருகின்றது
இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிநான்கு சுகாதார சேவைகள் அலுவலக பிரிவுகளிலும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள சுகாதார தரப்பினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை வரை ஐம்பத்தி நாலு (54) பேருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று செவ்வாயக்கிழமை வரை சினோபாம் தடுப்பூசி முதலாம் கட்டமாக 18251 நபர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 11226 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதுடன் பைசர் தடுப்பூசி முதலாம் கட்டமாக 1800 நபர்களுக்கும் அஸ்ராசெனிக்கா முதலாம் கட்டமாக 53 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 52 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment