மூன்றாவது தடுப்பூசி பூஸ்டர் செலுத்தப்படுகின்றது



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாடலாவிய ரீதியில் சுகாதார தரப்பினர் உள்ளிட்ட முன்வரிசை சேவையாளர்களுக்கு முதற்கட்டமாக செலுதப்பட்டு வருகின்றது

இதன் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிநான்கு சுகாதார சேவைகள் அலுவலக பிரிவுகளிலும் மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசிகள் சுகாதார தரப்பினருக்கு செலுத்தப்பட்டு வருகின்றது இதன் அடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் உள்ள சுகாதார தரப்பினருக்கு இன்று செவ்வாய்க்கிழமை வரை ஐம்பத்தி நாலு (54) பேருக்கு மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தெரிவித்தார்.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று செவ்வாயக்கிழமை வரை சினோபாம் தடுப்பூசி முதலாம் கட்டமாக 18251 நபர்களுக்கும் இரண்டாம் கட்டமாக 11226 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதுடன் பைசர் தடுப்பூசி முதலாம் கட்டமாக 1800 நபர்களுக்கும் அஸ்ராசெனிக்கா முதலாம் கட்டமாக 53 பேருக்கும் இரண்டாம் கட்டமாக 52 நபர்களுக்கும் செலுத்தப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :