இந்திய துணைத் தூதுவர் - முன்னாள் எம்பி திலகர் சந்திப்பு



லங்கைக்கான இந்திய உதவி உயர்ஸ்தாணிகர் ( கண்டி ) முனைவர் எஸ். ஆதிரா அவர்களை முன்னாள் நுவரெலிய மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் மலையக அரசியல் அரங்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான மயில்வாகனம் திலகராஜா சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தாணிகரகத்தின் தலைமையில் இயங்கும் தோட்டத் தொழிலாளர் கல்வி நிதியத்தில் பயன்பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது அத்தகைய உதவிகளைப் பெறுபவர்களின் சிக்கல்களுக்குத் தீர்வு காண்பது அவர்களுக்கான புலமைப்பரிசில் தொகையை அதிகரிப்பது முதலான விடயங்களைக் கலந்துரையாடியதுடன் நிதியத்தின்

75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்கனவே புலமைப் பரிசில் பெற்றவர்களை ஒருங்கிணைத்து அவர்களது அடைவுகளை அடையாளப்படுத்துவதன் ஊடாக எதிர்கால மாணவ சமூகத்துக்கு எடுத்துக்காட்டாக முன்வைக்கக் கூடிய திட்டங்கள் குறித்தும் தனது முன்மொழிவுகளை துணைத்தூதுவரிடத்தில் தான் சமர்ப்பித்ததாகவும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகர் தெரிவித்து உள்ளார்.

தான் குறித்த நிதியத்தின் கீழ் புலமைப்பரிசில் உதவிகளைப் பெற்றுக் கொண்டவன் என்ற வகையில் இந்தப் பணிகளை முன்னெடுப்பதில் தன்னார்வத்துடன் இந்தத் திட்டத்தினை முன்மொழிவதாகவும் தெரிவித்ததுடன் அது தொடர்பிலான கடந்த கால ஆவண சேகரிப்புகளையும் அண்மையில் வெளியிடப்பட்ட தனது 'பாராளுமன்றத்தில் திலகர்' உரைத் தொகுப்பு நூலின் பிரிதியொன்றையும் உதவித் தூதுவர் முனைவர் எஸ். ஆதிரா அவர்களிடம் கையளித்துள்ளார். இச்சந்தப்பின்போது உதவித் தூதரகத்தின் இரண்டாம் நிலை செயலாளர் கிருஷ்ணபிரசாத் அவர்களும் பிரசன்னமாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :