இம்தாத் விளையாட்டுக் கழகத்திற்கு நாபீர் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு



நூருல் ஹுதா உமர்-
ம்பாறை, சம்மாந்துறைப் பிரதேசத்திற்கு உட்பட்ட மஜீட்புர கிராமத்தின் இம்தாத் விளையாட்டுக் கழகத்தினருக்கு நாபீர் பவுண்டேசனினால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு மஜீட்புர கிராமத்தில் இடம் பெற்றது.
இம்தாத் விளையாட்டுக் கழக தலைவர் பைறுாஸ் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் செய்து வரும் நாபீர் பவுண்டேசன் ஸ்தாபகரும், சமூக சேவகருமான ஈ.சி.எம். நிறுவன பணிப்பாளர் உதுமான் கண்டு நாபீர் கலந்து கொண்டு விளையாட்டு வீரர்களுக்கு கடினபந்து விளையாட்டுக்கான உபகரணங்களை வழங்கி வைத்தார். இந் நிகழ்வில் கழக விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :