மாற்றுத்திறனாளிகளுக்கான இலவச மருத்துவ முகாம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான இலவச மருத்துவ முகாம் பிறைந்துறைச்சேனை சாதுலியா வித்தியாலயத்தில் இன்று நடைபெற்றது.

கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சமூக சேவை திணைக்களம், கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பு, நவஜீவனா நிறுவனம் மற்றும் இலங்கை குடும்ப திட்டமிடல் சங்கம் என்பவற்றின் ஏற்பாட்டில் இலவச மருத்துவ முகாம் இடம்பெற்றது.

கோறளைப்பற்று மத்தி ஒளிமயம் மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் தலைவர் எம்.எம்.றபீக் தலைமையில் நடைபெற்ற மருத்துவ முகாமில் மனநல மருந்துவர் வைத்தியர் பி.யூடி ரமேஸ் ஜெயகுமார், கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஏ.ஆர்.எஸ்.றுசைர், கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.நசீர், இலங்கை குடும்ப திட்டமிடல் சங்க மாவட்ட முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ், கோறளைப்பற்று மத்தி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக குடும்பநல உத்தியோகத்தர், அமைப்புக்களின் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலக பிரிவிலுள்ள மாற்றுத்திறனாளிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்களுக்கான உடல் ஆரோக்கியம் குறித்;து குருதிப் பரிசோதனை, தொற்றா நோய்க்கான பரிசோதனை, மாற்றுத்திறனாளிகளுக்கான உடல் திறன் பரிசோதனை, மருத்துவ ஆலோசனை உட்பட்ட பல பரிசோதனைகள் இடம்பெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :