கலாச்சாரத்தை அலுவல்கள் திணைக்களத்தின் வழிகாட்டலின் கீழ் கல்முனை பிரதேச செயலகமும் இனைந்து நடத்தும் "தொலஸ் மகே பகன" தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கலை உணர்வுகளை வெளி.உலகத்திற்கு வெளிப்படுத்தும் பதிவு செய்யப்பட்ட கலை மன்றங்களுக்கான காசோலை வழங்கும் நிகழ்வு நேற்று (12)கல்முனை பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி கலந்து கொண்டு கலை மன்றங்களின் தலைவர்களுக்கு காசோலைகளை வழங்கி வைத்தார்.
இந் நிகழ்வில் அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் டி.எம் றிம்சான்,சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளரும்,கலாச்சார அதிகார சபையின் பிரதித் தலைவருமான ஏ.ஆர்
எம்.சாலீஹ்,நிர்வாக உத்தியோகத்தர் எம்.என்.எம்.ரம்சான்,கலாச்சார உத்தியோகத்தர் எம்.எஸ் பெளசுல் ஹிபானா ஆகியோர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment