ஓய்வுபெற்ற கல்விப் பணிப்பாளர் முக்தாருக்கு கௌரவிப்பு விழா



அஸ்லம் எஸ்.மௌலானா-
ல்முனை வலயக் கல்வி அலுவலகத்தில் பிரதிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி ஓய்வுபெற்ற ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் சேவைகளை பாராட்டி கௌரவிக்கும் வைபவம் நேற்று முன்தினம் (22) வலயக் கல்வி அலுவலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

வலயக் கல்வி அலுவலக நலன்புரி அமைப்பின் ஏற்பாட்டில் வலயக் கல்விப் பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், கணக்காளர், பொறியியலாளர் மற்றும் உத்தியோகத்தர்களும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஓய்வுபெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.முக்தார் அவர்களின் சுமார் 35 வருட கால கல்வித்துறைக்கான உன்னத சேவைகள் பற்றி அதிகாரிகள் பலரும் பாராட்டிப் பேசியதுடன் நினைவுச் சின்னம், வாழ்த்துப்பா மற்றும் நினைவுப் பரிசுகள் வழங்கி, பொன்னாடை போர்த்தியும் கௌரவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :