வியாளேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு இரத்ததான முகாம்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு உதிரம் கொடுத்து உயிர் காப்போம் எனும் தொனிப்பொருளின் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெற்று வருகின்றது.

அந்தவகையில் கோறளைப்பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட முற்போக்கு தமிழர் கழகத்தின் ஏற்பாட்டில் வாழைச்சேனை கூட்டுறவு சங்க மண்டபத்தில் இரத்ததான முகாம் நேற்று சனிக்கிழமை முழு நாளும் நடைபெற்றது.
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு வைத்தியர் திருமதி கீர்திகா மதனழகன், இரத்த வங்கி பிரிவு உத்தியோகத்தர்கள், கோறளைப்பற்று முற்போக்கு தமிழர் கழகத்தின் உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவில் இரத்த பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் இரத்ததான முகாமில் பெருந்திரளான இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டு குருதி நன்கொடை செய்தனர்

இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாளேந்திரனின் பிறந்த நாளை முன்னிட்டு தொடர்ந்து 10 நாட்கள் மட்டக்களப்பு மாவட்டம் முழுவதும் இரத்ததான முகாம் நடைபெறவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :