தேசிய டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை இடம்பெற்று வருகின்றது.
நாட்டில் தற்போது மழை காலம் ஏற்பட்டுள்ள நிலையிலும், டெங்கு ஒழிப்பு திட்டத்தினை முன்னிட்டும் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் வீடு வீடாக சென்று பரிசோதனை செய்யும் நடவடிக்கை நடைபெற்று வருகின்றது
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ்.சந்திரமோகன், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் கலந்து கொண்டனர்.
இதன்போது வீடு வீடாக சென்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட போது வீட்டுச் சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருக்காத நபர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், டெங்கு குடம்பிகள் காணப்படும் வீட்டு நபர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை துண்டு வழங்கப்பட்டதுடன், உடனடியாக வீட்டு சுற்றுச் சூழலை சுத்தம் செய்யுமாறு பணிப்புரை விடுக்கப்பட்டது.
நாட்டில் தற்போது மழை காலம் ஏற்பட்டுள்ள நிலையில் டெங்கு தாக்கம் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் அதிகரிக்காத வகையில் டெங்கு பரிசோதனை நடவடிக்கை தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி ரி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment