சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவத்தினால் தேசியரீதியில் நடாத்தப்பட்ட 12 -18 வயதுப்பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, தரம் 9 பிரிவைச் சேர்ந்த மாணவன் செல்வன் எம்.ரீ.எம்.அர்மாஸ் தேசியரீதியில் முதலிடத்தைப் பெற்று கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் நற்கீர்த்தியைப் பெற்றுத்தந்துள்ளார்.
இச் சாதனை படைத்த மாணவன் , மாணவனின் பெற்றோர், பயிற்சிகளை வழங்கிய ஆசிரியை எம்.ஆர்.ஏ.இஸ்ஸத் ஜஹான் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்கள்,பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.
0 comments :
Post a Comment