தேசிய ரீதியில் நடாத்தப்பட்ட பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி மாணவன் அர்மாஸ் முதலிடம்.



எம்.ஐ.எம்.அஸ்ஹர்-
சிறுவர் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான நிறுவத்தினால் தேசியரீதியில் நடாத்தப்பட்ட 12 -18 வயதுப்பிரிவினருக்கான பேச்சுப் போட்டியில் கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரி, தரம் 9 பிரிவைச் சேர்ந்த மாணவன் செல்வன் எம்.ரீ.எம்.அர்மாஸ் தேசியரீதியில் முதலிடத்தைப் பெற்று கல்லூரிக்கும் பிரதேசத்திற்கும் நற்கீர்த்தியைப் பெற்றுத்தந்துள்ளார்.
இச் சாதனை படைத்த மாணவன் , மாணவனின் பெற்றோர், பயிற்சிகளை வழங்கிய ஆசிரியை எம்.ஆர்.ஏ.இஸ்ஸத் ஜஹான் ஆகியோருக்கு கல்லூரி அதிபர் எம்.ஐ.எம்.ஜாபிர் , பிரதி அதிபர்கள் ,உதவி அதிபர்கள் , பகுதித் தலைவர்கள் , ஆசிரியர்கள் மற்றும் கல்விசாரா உத்தியோகஸ்தர்கள்,பழைய மாணவர் சங்கம் , பாடசாலை அபிவிருத்திச் சங்கம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :