சமூக சேவைகள் திணைக்களத்தின் நிதி அனுசரணையோடு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் கீழ் உள்ள பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று(10.11.2021) பிரதேச செயலாளர் ரி.ஜே. அதிசயராஜ் தலைமையில் நடைபெற்றது.
பிரதேச மட்டத்தில் கணவனை இழந்த பெண்கள், தாய் தந்தையை இழந்தவர்கள், நலிவுற்றோர் மற்றும் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்கோடு சுயதொழில் முயற்சிகளுக்கான உதவிகளை சமூக சேவைகள் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றன. இந்த வேலைத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு இவ்வாறு வாழ்வாதார உதவித் திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டன.
சில்லறை வியாபார முயற்சியில் ஈடுபடுவோருக்கு வியாபார உபகரணங்கள், தையல் தொழிலில் ஈடுபடுவதற்கு தையல் இயந்திரங்கள், சுயதொழிலில் ஈடுபடும் பெண்களுக்கு அவர்களின் சுய தொழிலை ஊக்குவிப்பதற்கான உபகரணங்கள் என்பனவும் வழங்கிவைக்கப்பட்டன.
இந்த நிகழ்வில் பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் எம்.ஜீவராஜ், சமூகசேவை உத்தியோகத்தர் எம். ஐ. எம். முர்சித், சமூக சேவைகள் திணைக்களத்தின் அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி லில்லிமலர் சுபாஷ்கரன் உட்பட அலுவலக உத்தியோகத்தர்கள் இதில் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment