மட்டக்களப்பு மத்தி வலய, ஆசிரியர் தொழில் வாண்மை நிலையத்தின் தலைமை அதிகாரியும் விரிவுரையாளருமான அ.றியாஸினால் தமிழில் எழுதப்பட்ட மேற்படி நூல் வெளியீட்டு (2021.11.12) நேற்று மாலை ஏறாவூர் அல்முநீரா பாலிகா மகா வித்தியாலய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
நல்லிணக்க மற்றும் வலுவூட்டலுக்கான நிலையத்தின் தலைவர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம் .நஸீர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வின் பிரதம அதிதியாக அட்டாளைச்சேனை கல்விக் கல்லூரி பீடாதிபதி கி.புண்ணியமூர்த்தி கலந்து கொண்டார்.
நூல் பற்றிய ஆய்வுரையை வைத்தியர் எச்.எம்.ஏ.மௌஜுத் நிகழ்த்த, சிறப்புரைகளை மட்டக்களப்பு மத்தி வலய கல்விப்பணிப்பாளர் அல்ஹாஜ் உமர் மௌலானா, மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் அலி ஷாஹிர் மௌலானா ஆகியோர் நிகழ்த்தினர்.
பல்வேறு துறைசார் முக்கியஸ்தர்களின் பங்கு பற்றுதலுடன் நடைபெற்ற இந் நூல் வெளியீட்டின் ஏற்புரையை நூல் ஆசிரியர் ஏ.றியாஸ் நிகழ்த்தினார்.
0 comments :
Post a Comment