பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும்



பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிக்கையில், தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது கட்டாயமாக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கண்டி தேசிய வைத்தியசாலையில் அமைக்கப்படும் புற்றுநோய் சிகிச்சை நிலையத்தின் முதற்கட்டத்தை வைபவ ரீதியாக திறந்து வைக்கும் விழாவில் அமைச்சர் உரையாற்றினார். இந்தப் புற்றுநோய் சிகிச்சை நிலையம் கண்டி தேசிய வைத்தியசாலையின் வளாகத்தில் 12 மாடிகளைக் கொண்டதாக நிர்மாணிக்கப்படுகிறது. இது 600 கட்டில்களைக் கொண்டதாக 195 கோடி ரூபா செலவில் நிர்மாணிக்கப்பட்டது.

நேற்று (11) நடைபெற்ற இந்த நிகழ்வில் இதுகுறித்து அமைசர் மேலும் தெரிவிக்கையில் ,தடுப்பூசி அட்டையை வைத்திருப்பது தொடர்பான யோசனை சட்டமா அதிபரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. சட்டமா அதிபர் நேற்று பதில் அளித்துள்ளார். இதன் பிரகாரம், இரு தடுப்பூசிகளையும் பெறாத ஒருவர் பொது ஸ்தானங்களுக்குள் பிரவேசிப்பதைத் தடை செய்யவதற்கு சட்ட சிக்கல்கள் இல்லையென கூறினார். இந்த விதிமுறையை அமுலாக்க ஸ்மார்ட்-போன் அப் முதலான தொழிலநுட்பங்களைப் பயன்படுத்தப் போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது இலங்கையின் வைத்தியசாலை ஒன்றிற்குள் நிர்மாணிக்கப்படும் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை நிலையமாகும். புதிய சிகிச்சை நிலையம் மஹரகம அபேக்ஷா புற்றுநோய் வைத்தியசாலைக்கு அடுத்தபடியாக கூடுதல் வசதிகளையும், நவீன கருவிகளையும் கொண்டதாக அமைக்கப்படுகிறது.

எனவே, மத்திய மாகாணத்தில் எவருக்கேனும் புற்றுநோய் ஏற்படும் பட்சத்தில், அவரை மஹரகம அபேக்ஷா வைத்தியசாலைக்கு அனுப்பும் தேவை இருக்காது என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :