அன்றைய சுனாமியும் இன்றைய சுமையும் (கவிதை)

 


அன்றைய சுனாமியும் இன்றைய சுமையும்

+++++
Mohamed Nizous

அன்று 
அலை எழும்பி
அழித்து விட்டுப் போனது
இன்று 
விலை எழும்பி
வழித்து விட்டுப் போகிறது

அன்று 
கடல் வந்து 
காவு கொண்டது
இன்று
கடன் வந்து
நோவு தந்தது

அன்று
அலை நுரையால்
சோலைகள் அழிந்தன
இன்று
நுரைச் சோலையால்
மின் 
அலைகள் 
அழிகின்றன

அன்று
உயிர் இறந்து போனது
இன்று
பயிர் இறந்து போகிறது

அன்று
தோழர் பிரிந்து போக
நெஞ்சம் வெடித்தது
இன்று
டாலர் குறைந்து போக
பஞ்சம் வெடிக்கிறது

அந்த வலி நினைத்து
விழி நனைகிறது
இந்த வலி மாற
வழி தேடுகிறது
இதயம்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :