2022 ஆம் ஆண்டின் முன்பள்ளிப் பாலர் பாடசாலைகள் ஆரம்பிக்கும் நிகழ்வு : இறக்காமம் உதவிப் பிரதேச செயலாளர் ஆரம்பித்து வைத்தார்.



நூருல் ஹுதா உமர்-
2022 ஆம் ஆண்டின் முன்பள்ளிப் பாலர் பாடசாலைகள் நாடளாவிய ரீதியில் ஆரம்பிக்கும் நிகழ்வுகள் இடம் பெற்று வருகின்றன. இத்தொடரில் இறக்காமம் பிரதேசத்தில் காணப்படும் பாலர் பாடசாலைகளின் வித்தியாரம்ப நிகழ்வுகளும் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. இந்தவகையில் இறக்காமம் பிரதேச Global Change Makers - GCM முன்பள்ளிப் பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு புதன் கிழமை பாலர் பாடசாலையின் ஆசிரிகைகளான யூ.எல். சபினாஸ், யூ.எல். பாத்திமா நஸ்பா, எம்.ஜெஸானா பர்வின் ஆகியோரின் ஏற்பாட்டில் பாலர் பாடசாலை நிறைவேற்றுப் பணிப்பாளர் எம்.எஸ்.எம். றௌஸானின் தலைமையில் இடம்பெற்றது.

முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாடின் வழிகாட்டல் மற்றும் ஆலோசனையின் அடிப்படையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு இறக்காமம் பிரதேச உதவிப் பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. அஹமட் நஸீல் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச். வஹாப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல்.ஸபூறுல் ஹஸீனா மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் எஸ்.எப். றிஸ்மியா ஜஹான் ஆகியோரும் விஷேட அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :