ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் தடுப்பூசி திட்டத்தினை ஆரம்பித்து ஒரு வருட நிறைவு நிகழ்வு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கவும் தொற்றினை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காகவும் அரசாங்கத்தினால் பல்வேறு வேலைத்திட்டங்கள் செயற்படுத்தப்பட்டு வருகின்றது.
அதன் அடிப்படையில் கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாக்கும் நோக்கில் தடுப்பூசி திட்டத்தினை ஆரம்பித்து ஒரு வருட நிறைவு நிகழ்வு நாடலாவிய ரீதியில் நேற்று (29.01.2022) சனிக்கிழமை காலை 10.06 மணிக்கு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு மற்றும் வைத்தியசாலைகளில் இடம் பெற்றது.
அந்தவகையில், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எச்.எம்.எம்.தாரிக்; தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் கொரோனா தொற்றினால் மரணமடைந்தவர்களை நினைவு கூறும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் கொவிட் பரவல் தொடர்பாகவும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதில் ஏற்படும் பயன்கள் தொடர்பாகவும் விளக்கங்கள் அளிக்கப்பட்டது.
இந் நிகழ்வில் ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நௌபர், ஓட்டமாவடி பிரதேச செயலக உதவி திட்ட பணிப்பாளர் எஸ்.ஏ.றியாஸ், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் சமூக மட்ட அமைப்புகளின் பிரதி நிதிகள்;, பள்ளிவாயல்களின் இமாம்கள்; என பலரும் கலந்து கொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :