தொலைந்து போன எட்டு பவுன் நகைகளை கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்த பெண்ணுக்கு பாராட்டுக்கள்



எச்.எம்.எம்.பர்ஸான்-
தொலைந்து போன பெண்ணொருவரின் எட்டு பவுன் நகைகளை வேறு பெண்ணொருவர் கண்டெடுத்து உரியவரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று இன்று (21) இடம்பெற்றுள்ளது.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோழிக்கடை வீதியைச் சேர்ந்த பெண்ணொருவர் தனது நகைகளை எடுத்துச் செல்லும் போது கடந்த 19 ஆம் திகதி தவற விட்டுள்ளார்.
அவ்வாறு தவற விட்ட நகைகளை அதே பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் இன்று கண்டெடுத்து உரிய நபரிடம் ஒப்படைத்துள்ளார்.

ஏழ்மையான நிலையிலும் நகைகளை கண்டெடுத்து ஒப்படைத்த பெண்ணுக்கு நகை உரிமையாளர் சில நகைகளை அன்பளிப்பு செய்த போதும் அதனை அந்த பெண்மணி ஏற்க மறுத்துள்ளார்.
நகைகளை கண்டெடுத்து ஒப்படைத்த பெண்ணுக்கு நகை உரிமையாளர் உட்பட பலரும் வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :