பல்கலைகழக மாணவிக்கு மடிக்கணணி வழங்கி வைப்பு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர் எம்.கிருஸ்ணா-
கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மலையக கிளை ஏற்பாட்டில் பல்கலைகழக மாணவி ஒருவருக்கு மடிக்கணணி வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் சுவிஸ் கிளை உறுப்பினர்களின் நிதிப்பங்களிப்பில் தென்கிழக்கு பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் இரண்டாம் ஆண்டில் கல்வி கற்கும் மஸ்கெலியா - எடம்ஸ்பீக் தோட்டத்தை சேர்ந்த கணேசன் அனுஷா என்ற மாணவிக்கே மடிக்கணணி வழங்கி வைக்கப்பட்டது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தினால் முன்னெடுத்துவரும் வறுமை கோட்டின் கீழ் வாழும் குடும்பத்தில் கல்வி கற்கும் மலையக பல்கலைக்கழக மாணவர்களை ஊக்குவிக்கும் திட்டத்தில் ஒன்றாக 02/01/2022 இன்றைய தினம் தெரிவு செய்யப்பட்ட மேற்படி மாணவிக்கு மடிக்கணணி வழங்கப்பட்டது.

கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் மலையக கிளை ஒருங்கிணைப்பாளர் இரா.இராஜேந்திரன் தலைமையில் அட்டன் டைன் ரெஸ்ட் விருந்தகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் முன்னாள் ஆசிரியர் ஆலோசகரும் கிராமிய கல்வி அபிவிருத்தி நிறுவனத்தின் ஆலோசகருமான கே.ராஜசேகர், நோர்வூட் பிரதேசசபை உறுப்பினர் எம்.ராமச்சந்திரன் மற்றும் பல்கலைகழக மாணவர்களும் கலந்து கொண்டனர்.
மேலும் தெரிவு செய்யப்பட்ட 35 பல்கலைக்கழக மாணவர்களுக்கு கற்றல் நடவடிக்கையை ஊக்குவிக்கும் வகையில் அச்சுப்பிரதி (Photocopy) பெற்றுக்கொள்ள ஒரு வருடத்திற்கு தலா 06 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீடு கிராமிய அபிவிருத்தி நிறுவத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :