தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக ஷிராஸ் ஜுனூஸ் நியமனம்



நூருல் ஹுதா உமர்-
முன்னாள் மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி தலைமையிலான தேசிய ஐக்கிய முன்னணியின் தேசிய அமைப்பாளராக கொழும்பை சேர்ந்த பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூஸ் இன்று (24) நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி இந்த நியமனத்திற்கான உத்தியோகபூர்வ கடிதத்தை கட்சியின் அலுவலகத்தில் வைத்து தேசிய அமைப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் பிரபல சமூக செயற்பாட்டாளர் ஷிராஸ் ஜுனூசிடம் இன்று கையளித்தார். கடந்த காலங்களில் சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் வளர்ச்சிக்காக பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்திருந்த ஷிராஸ் ஜுனூஸ் கடந்த கொழும்பு மாநகர சபை தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சார்பில் தேர்தலில் வேட்பாளராக களமிறங்கியிருந்ததுடன் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவின் தேசிய இணைப்பாளராகவும் கடந்த காலங்களில் கடமையாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :