இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின் அலுவலகம் திறப்பு



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின்; கிழக்கு மாகான இணைப்பு செயலாளரின் அலுவலகம் ஓட்டமாவடியில் நேற்று முன்தினம் (22.01.2022) மாலை திறந்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்டத்துறை அமைச்சின் கிழக்கு மாகாணத்திற்கான இணைப்புச் செயலாளர் கலாநிதி எம்.பி. முஸம்மில் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பெருந்தோட்டத்துறை இராஜங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவினன் பிரத்தியோக செயலாளர் டீமால் பத்நாயக்கா, அமைச்சின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பளர் சதீஸ்கான், வாகரை பிரதேச சபையின் உப தவிசாளர் சந்திரபால அமைச்சின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சின் கீழ் உள்ள திணைக்களங்களின் கிழக்கு மாகாண மக்களின் தேவைகள் இக் காரியாலயத்தின் மூலம் நிவர்த்தி செய்யப்படும் என்று பெருந்தோட்ட இராஜாங்க அமைச்சர் அருந்திக்க பெர்னாண்டோவின்; பிரத்தியோக செயலாளர் டீமால் பத்நாயக்கா தெரிவித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :