ஷில்பா அபிமானி - மாகாண கைவினைப் போட்டி



பைஷல் இஸ்மாயில் -
தேசிய கைவினைப் பேரவையினால் நடாத்தப்பட்ட கிழக்கு மாகாணத்திலுள்ள கைவினைஞர்களுக்கான ஷில்பா அபிமானி மாகாண கைவினைப் போட்டி 2021 மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டியில் பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கியவர்களுக்குள் தெரிவு செய்யப்பட்ட கைவினைஞர்களுக்கான கௌரவிப்பும் சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (05) கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தில் இடம்பெற்றது.

கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுக்கு கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.யூ.ஏ.ஜெலீல், முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இதன்போது ஷில்பா அபிமானி மாகாண கைவினைப் போட்டி 2021 இற்கான மாகாண மற்றும் தேசிய மட்டப் போட்டியில் பல்வேறு வகையான தயாரிப்புகளை வழங்கி தெரிவு செய்யப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை கிழக்கு மாகாண கிராமிய கைத்தொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் திருமதி கவிதா உதயகுமார், கிழக்கு மாகாண முதலமைச்சின் செயலாளர் திருமதி ஆர்.யூ.ஏ.ஜெலீல், முதலமைச்சின் திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எஸ்.எம்.உவைஸ், தேசிய கைவினைப் பேரவையின் தலைவர் சம்பத் எரஹபொல ஆகியோரினால் வழங்கி வைக்கப்பட்டது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :