இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் பேராசிரியராக கலாநிதி ஏ.எல்.எம்.றியால்!


லங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மெய்யியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளரான கலாநிதி ஏ.எல்.எம்.றியால் இன்று நடைபெற்ற (2022.02.26) பேரவைக்கூட்டத்தின் தீர்மானத்திற்கமைய 06.12.2019 ஆம் திகதி முதல் பேராசிரியராக பதவியுயர்வு பெறுகிறார்.
பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மெய்யியலில் விஷேட கலைமாணிப்பட்டத்தையும் முதுதத்துவமாணி பட்டத்தையும் பூர்த்தி செய்துள்ள இவர்; தனது கலாநிதிப்பட்டத்தினை சீன Xiamen பல்கலைக்கழகத்திலும் நிறைவுசெய்துள்ளார்.
பல்கலைக்கழகத்தில் பல்வேறு பதவிகளை வகித்துள்ள இவர் மேற்கத்தேய மெய்யியல், அரசியல் மெய்யியல், ஒழுக்க மெய்யியல் போன்ற துறைகளில் தனது ஆய்வுகளை மேற்கொண்டுள்ளதோடு பல தேசிய, சர்வதேச ஆய்வு மாநாடுகளிலும் பங்குபற்றி தனது ஆய்வுகளை சமர்ப்பித்துள்ளார்.
இவரது பதவியுயர்வில் மகிழ்வுறுவதுடன் அவரை இம்போட் மிரர் ஊடக வலையமைப்பு கௌரவத்துடன் பாராட்டுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :