லெதன்டி புரடெக் தோட்ட நடை பாதை புனரமைப்பு; உதயகுமார் எம்.பி நிதி ஒதுக்கீடு



நோட்டன் பிரிட்ஜ் நிருபர்
எம்.கிருஸ்ணா-

தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதித் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் உதயகுமாரின் பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் டிக்கோயா லெதன்டி தோட்ட புரடெக் (மந்திதோட்டம்) பிரிவில் நடைபாதையொன்று புனரமைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் தேசிய முன்னணியின்
நோர்வூட் பிரதேசசபையின் உறுப்பினரும் சமர்வில் வட்டார பொறுப்பாளருமான இராமச்சந்திரன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் நோட்டன் பிரதேச அமைப்பாளர் நந்தகோபால் ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமாரின் இரண்டு இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ பிரதேச செயலகத்தின் திட்டமிடல் பிரிவின் கண்காணிப்பின் ஊடாக செப்பனிடப்பட்ட இந்த நடைபாதையை தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி நிதிச் செயலாளரும் மத்திய மாகாணசபையின் முன்னாள் உறுப்பினருமான சோ. ஸ்ரீதரன்
குறிப்பிட்ட தோட்டத்திற்கு சென்று பார்வையிட்டார்.
புரடொக் தோட்ட மக்கள் அதிகமாக பயன்படுத்தி வந்த நடைபாதையை கொங்ரீட் கலவை கொண்டு செப்பனிடப்பட்டமை குறித்து தோட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :