இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபணத்தின் தமிழ் சேவை முன்னாள் கட்டுப்பாட்டாளரும் முஸ்லிம் சேவையின் முன்னாள் பொறுப்பாளரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான மர்ஹும் அல்ஹாஜ் சனூஸ் முஹம்மத் பெரோஸ் அவர்களுக்கான துஆப் பிரார்த்தனையும் நினைவு நிகழ்வும் ஒலிபரப்பாளர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் 18ம் தகதி வெள்ளிக்கழமை பிற்பகல் ஜாவத்தை ஜும்ஆ மஸ்ஜிதி்ல் இடம் பெற்றது.
ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட ஒலிபரப்பாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபணத்தின் பணிப்பாளருமான அல்ஹாஜ் யூ.எல்.யாக்கூப் அவ்களின் தலைமையில் இடம் பெற்ற இந் நிகழ்வில் வரவேற்புரையை அஷ்ஸெய்யத் ரஸ்மி மௌலானானா நிகழ்த்தினார். அதனைத் தொடர்ந்து உலக அறிவிப்பாளர் சிரேஷ்ட ஒலிபரப்பாளர் பீ.எச்.அப்துல் ஹமீத், இ.ஒ.கூ. தமிழ் சேவையின் முன்னாள் கட்டுப்பாட்டாளர் ஆர்.யோகராஜன், சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் புத்த சாசன கலாசார அலுவல்கள் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான ஜெரஞ்சன் யோகராஜன், சிரேஷ்ட ஒலிபரப்பாளரும் இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன தொழில் நுட்ப உத்தியோகத்தருமான எம்.ஐ.சிஹாமுதீன்,தென்றல் சேவையின் உதவிப் பணிப்பாளரும் சட்டத்தரனியும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான ஏ.எம்.தாஜ், இ.ஒ.கூ.தமிழ் சேவையின் முன்னாள் பணிப்பாளரும் சிரேஷ்ட ஒலிபரப்பாளருமான கே.ஜெயகிருஷ்னா ஆகியோர் மர்ஹும் பெரோஸ் அவர்களைப் பற்றிய நினைவுகளை மீட்டினர். மர்ஹும் பெரோஸ் அவர்களின் புதல்வர் பஸ்ஹான் அவர்கள் குடும்பத்தின் சார்பாக ஏற்புரை வழங்கினாா்.
நன்றி உரை நிகழ்த்தினார் ஒலிபரப்பாளர் மனித நேயன் இர்ஷாத் ஏ.காதர் அவர்கள் நிகழ்ச்சிகளை ஒலிபரப்பாளர் எஸ்.எல்.எம்.றிழா தொகுத்து வழங்கினார். இந்நிகழ்வில் அரச மற்றும் வானொலி ,தொலைக்காட்சி ஒலி,ஔிபரப்பாளர்கள் மர்ஹும் பெரோஸ் அவர்களின்குடும்பத்தினர் மற்றும் அவரது நெருங்கிய நண்பர்களும் ஊடகவியலாளர்களும் கலந்து சிறப்பித்தனர். நிகழ்வின் ஆரம்பத்தில் யாஸீன் சூறா ஓதி துஆ பிரார்த்தனையை மௌலவி அப்லல் நிகழ்த்தினார்
0 comments :
Post a Comment