சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் ஆற்றிவரும் ஊடக சேவைக்காக பொன்னாடை, பொற் கிளி கௌரவம்.



றாசிக் நபாயிஸ்-
ம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத்தின் தலைவரும், சிரேஷ்ட ஊடகவியலாளரும், ஊடக வித்தகருமான கவிஞர் கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதர் கடந்த 34 வருடங்களாக ஊடகத்துறைக்கு ஆற்றிவரும் சேவையைப் பாராட்டி மருதமுனையில் பொன்னாடை போர்த்தி.பொற் கிளி வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

மர்ஹும் பழீல் மௌலானாவின் 9வது ஆண்டு நிறைவு நிறைவையொட்டி பழீல் மௌலானா பவுண்டேஷன் ஏற்பாட்டு செய்திருந்த கௌரவிப்பு நிகழ்வு வெள்ளிக்கிழமைை
(25-02-2022)மருதமுனையில் பவுண்டேஷனின் தலைவரும், சிரேஷ்ட சட்டத்தரணியுமான எப்.எம்.அமீறுல் அன்ஸார் மௌலானாவின் இல்லத்தில் நடைபெற்றது.

பவுண்டேஷனின் தவிசாளரும், சிரேஷ்ட விரிவுரையாளருமான அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமட் அன்ஸார் மௌலானா (நழீமி) தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி கலந்து கொண்டு கலாபூஷணம் பி.எம்.எம்.ஏ.காதருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவித்தார்.அத்துடன் அஷ்ஷெய்க் எப்.எம்.அஹமட் அன்ஸார் மௌலானா பொற் கிளி வழங்கி கௌரவித்தார்.

பழீல் மௌலானா பவுண்டேஷனின் செயலாளரும், சிரேஷ்ட
ஊடகவியலாளருமான எம்.எல்.எம்.ஜமால்தீன் நிகழ்வை நெறிப்படுத்தினார். இங்கு வர்த்தகர் ஏ.கே.எம்.நழீர், கல்முனை தபாலதிபர், பி.எம்.அஸ்கர், பவுண்டேஷனின் பொருளாளரும், ஆசிரிய ஆலோசகருமான கபீல் முஸ்தபா உள்ளீட்ட உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :