அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் மாபெரும் இரத்ததான முகாம்



சியாத்.எம்.இஸ்மாயில்-
க்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை இரத்த வங்கிக்கு அன்பளிப்புச் செய்யும் நோக்கில், அட்டாளைச்சேனை மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாபெரும் இரத்ததான முகாம் அட்டாளைச்சேனை அறபா வித்தியாலயத்தில் இன்று (27) நடைபெற்றது.

அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை வைத்திய அத்தியட்சகர் டாக்டர். அஸாத் .எம்.ஹனிபா அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க, மார்க்ஸ்மென் விளையாட்டு கழகத்தின் தலைவரும் ஊடகவியலாளருமான றிசாத் ஏ.காதரின் ஒருங்கிணைப்பில் கொவிட் கால நிலைமை மற்றும் இரத்தப் பற்றாக்குறையைக் கருத்திற்கொண்டு மேற்படி நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இம் முகாமில் வைத்தியசாலையின் இரத்த வங்கி வைத்தியர்கள், தாதி உத்தியோகத்தர்கள், விளையாட்டு கழக பிரதிநிதிகள் ஆகியோர் ஒத்துழைப்பு நல்கியதுடன், இதில் ஆண்கள், பெண்கள் என இரத்த கொடையாளர்கள் பெரும்பாலானோர் ஆர்வத்தோடு கலந்துகொண்டு இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :