மருத்துவ பீடத்துக்கு தெரிவான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸனூஸ் பாத்திமா நூஹா பாராட்டி கௌரவிப்பு



அஸ்ஹர் இப்றாஹிம்-

சாய்ந்தமருது பிரதேச வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தினால் மட்டக்களப்பு மருத்துவ பீடத்துக்கு ஆண்டு 2020/2021 இல் தெரிவான கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி ஸனூஸ் பாத்திமா நூஹா பாராட்டி கௌரவிக்கப்பட்டார்.
.வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்களின் பிள்ளைகள் சிறந்த அடைவு மட்டத்தை அடையும் போது அவர்களை கெளரவித்தல் திட்டத்தின் கீழ் முதல் தடவையாக இந்நிகழ்வு ஆரம்பித்து வைக்கப்பட்டது.
டாக்டர் ஜீவா சிவசுப்ரமணியம் தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் மாணவியின் பெற்றோர் , வைத்தியசாலை ஊழியர் நலன்புரிச் சங்கத்தின் உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
வைத்தியசாலை தாதிய பரிபாலகர் பீ.எம்.நஸீறுதீன் இந்நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :