கவிஞர் கதீருக்கு இன்னுமோர் இலக்கிய அங்கீகாரம்! (படங்கள் இணைப்பு)



டந்த மூன்று தசாப்தங்களாக இலக்கியத்திற்காக பங்காற்றிவருபார் கவிஞர் கதீர். மஞ்சரி, பூவிழி சஞ்சிகையில் ஆரம்பித்து முகநூல் வரையில்; தனது பல்வேறு படைப்புக்களைத் தந்த இவர் இடைப்பட்ட காலத்தில் மணல்நதி எனும் கவிதைத் தொகுதியினை பிரசவித்திருந்தார்.

இத்தனை காலமும் கவிதையினூடாக தான் கொண்டிருந்த புலமையை உலகறியச்செய்த கதீர், 27.02.2022 இல் காக்கை நிறச் சேலை எனும் சிறுகதைகள் அடங்கிய நூல் ஒன்றினை வெளியிட்டு இலக்கியத்துறையில் இன்னுமோர் படியைத் தொட்டுள்ளார்.

கலைஞர்கள் ,பல்துறைகளையும் சார்ந்தவர்கள் மற்றும் வாசகர்கள் நண்பர்கள் உறவினர்கள் புடைசூழ; கவிஞரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் அஸாத் எம் ஹனீபாவின் தலைமையில் கவிஞர் கதீரின் காக்கை நிறச் சேலை எனும் சிறுகதைகள் அடங்கிய நூல் வெளியீட்டு நிகழ்வு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெற்றது.

கவிஞர் விஜிலியின் அரங்கழைப்புடன் இடம்பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை பல்துறை எழுத்தாளர் ஏ.எம்.பறக்கத்துள்ளாஹ் நிகழ்த்திய அதேவேளை தலைமையுரையை கவிஞரும் வைத்திய அத்தியட்சகருமான வைத்தியர் அஸாத் எம் ஹனீபா நிகழ்த்தினார். இவரது உரையில் நூலாசிரியர் பற்றியும் அவர் எழுத்துத்துறையில் கொண்டுள்ள ஆர்வம் குறித்தும் சிலாகித்துப் பேசினார். அத்துடன் நிகழ்வுக்கு வந்துள்ளவர்களின் வரவே எழுத்தாளருக்குக் கிடைத்துள்ள அங்கீகாரம் என்றும் தெரிவித்தார்.

நூல்பற்றிய விமர்சனங்களை ரியாஸ் குரானா, டணிஸ்கரன், கே.எல். நப்லா, மு.மு.மு. பாசில், ஏ.எம். சாஜித் அஹமட் மற்றும் சிறாஜ் மசூர் என்ற கலைஞர் பட்டாளமே வழங்கிச் சென்றது.

நூலின் முதற் பிரதியை நூலாசிரியரின் மனைவி சர்ஜானா பெற்றுக்கொண்ட அதேவேளை குறித்த நூல் அவரது மனைவிக்கே சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது.

1. ஆக்கா
2. கரு நொச்சி
3. குலை மாறிக் காய்த்த தென்னை
4. ஞாயிறும் புதனும்
5. பூனைக் குடில்
6. பேரன்-மகன்-வீடு
7. பேராசிரியரின் கொலை
8. மெல்லுணர்வு


ஆகிய சிறுகதைகளை உள்ளடக்கிய இத் தொகுதியை அநுசரி வெளியீட்டகத்தின் வெளியீடாக அமைந்திருந்தது. ஜீவமணியின் முகப்பு வடிவப்புடன் கூடிய இந்நூல் பல விமர்சகர்களின் பாராட்டுக்களையும் பெற்றது குறிப்பிடத்தக்கது.














இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :