வீடுபுகுந்து மணிபேர்ஸ் திருடிய கள்வன் 24மணிநேரத்துள் கைதுசெய்யப்பட்டார். இச்சம்பவம் கல்முனையில் இடம்பெற்றுள்ளது. இவ்விதம் திருட்டு இடம்பெற்று 24மணிநேரத்துள் கள்வனையும் அவர்பாவித்த மோட்டார் சைக்கிளையும் பணத்தையும் மீட்ட கல்முனை பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரிக்கு மக்கள் பாராட்டுத்தெரிவித்தனர்.
சம்பவம் பற்றித்தெரியவருவதாவது:
கல்முனை வைத்தியசாலை வீதியில் வசிக்கும் ஒலுவில் துறைமுகத்தில் பணியாற்றும் உத்தியோகத்தர் எஸ்.நாகேந்திரன் அன்றுமாலை வீடுவந்து சேர்ந்ததும் மறுகணம் மோட்டார்சைக்கிளில் முன்பின் தெரிந்தவர்போல் ஒரு இளைஞர் வீட்டுக்குள் வந்தார்.
முன்பின் தெரியா அவரை வெளியில்அனுப்புவதற்காக வாயிலைத்திறக்க முன்னுக்குசென்ற சமயம் அந்த இளைஞர் திடீரென மேசையில் இருந்த மணிபேர்ஸை திருடி எடுத்துள்ளார்.இதனை நாகேந்திரன் காணவில்லை.
அவர் சென்றபின்புதான மணிபேர்சைத் தேடினார். இல்லை.அவ்வேளையில் இவர் மட்டுமே வந்துசென்றவர் சந்தேகத்திற்கிடமானவர் இவர்தான் எடுத்திருக்கக்கூடும் என்று தனது வீட்டில் பொருத்தியிருந்த சிசிரிவி கமராவில் பார்த்தார். அவர் வந்த மோட்டார்சைக்கிளின் இலக்கமும் துல்லியமாகத்தெரிந்தது. உடனே நாகேந்திரன் கல்முனைப் பொலிஸ்நிலையத்திற்குச் சென்று முறைப்பாடு தெரிவித்தார்.கூடவே பொலிஸ்நிலையப்பொறுப்பதிகாரியையும் சந்தித்து முறையிட்டார்.
அவர்கள் துரிதமாக மோட்டார்வாகனப்பரிவுடன் தொடர்புபட்டு வாகன உரிமையாளரைக்கண்டுபிடித்து நற்பிட்டிமுனைக்குவிரைந்து அவரைக்கைதுசெய்து மோட்டர்சைக்கிள் மற்றும் மணிபேர்ஸ்ஷையும் மீட்டுவந்து நாகேந்திரனுக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் பொலிஸ்நிலையம்சென்று அதனைப்பெற்றுக்கொண்டார்.கூடவே கல்முனைதமிழ்ப்பிரதேசத்தில் இவ்வாறு 24மணிநேரத்துள் திருடனைக்கண்டுபிடித்தமை இதுவே முதற்தடவை.அதற்காக அதிகாரிக்கும் குழுவினருக்கும் நன்றியும் வாழ்த்தும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment