இலங்கை கிழக்கு பல்கலைக்கழகத்தின் 25வது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 12 ஆம் 13 ஆம் திகதிகளில் பல்கலைக்கழக நல்லையா ஞாபகார்த்த கேட்போர் கூட மண்டபத்தில் இடம்பெறவுள்ளது .
கிழக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் வ. கனகசிங்கம் அவர்களது ஒருங்கிணைப்பில் நடைபெறவுள்ள இப் பட்டமளிப்பு விழாவானது பல்கலைக்கழக வேந்தர் வைத்திய கலாநிதி விவேகானந்த ராஜா தலைமையில் நடைபெறவுள்ளதுடன் இவ்விழாவின் முதலாம் நாள் அமர்வுகளில் விஷேட அதிதியாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஸ்ட பேராசிரியர் சந்தன பீ உடவத்த அவர்களும் இரண்டாம் நாள் அமர்வில் விசேட அதிதியாக கல்வியமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே கபில பெரேரா அவர்களும் கலந்து சிறப்பிக்க உள்ளதுடன் விசேட உரையையும் ஆற்ற உள்ளனர் .
இவ்விழாவில் காலஞ்சென்ற முன்னாள் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் அவர்களுக்கு கௌரவ விஞ்ஞான கலாநிதி பட்டமும், சீனித்தம்பி கோபாலசிங்கம் அவர்களுக்கு கௌரவ இலக்கிய முதுமாணிப் பட்டமும் வழங்கி கௌரவிக்கப்படவுள்ளனர்.
அத்துடன் முதலாவது நாள் இடம்பெற உள்ள பரிசளிப்பு நிகழ்வுகள் மூன்று அமர்வுகளாக இடம்பெறவுள்ளதுடன் , இதன் போது 883 மாணவர்களும் இரண்டாம் நாள் இடம்பெற உள்ள மூன்று அமர்வுகளின் போது 1075 மாணவர்களுமாக முதுமாணி , இளமாணி பரீட்சையில் சித்திபெற்ற 1958 மாணவர்கள் தங்களுக்கான பட்டங்களை இதன்போது பெற்றுக் கொள்ளவுள்ளனர்.
0 comments :
Post a Comment