அஸ்ஹர் இப்றாஹிம் -
சாய்ந்தமருது கிரிக்கட் சம்மேளனம் ஒழுங்கு செய்து நடாத்திக் கொண்டிருக்கும் 15 ஓவர்கள் மட்டுப்படுத்தப்பட்ட கடின பந்து கிறிக்கட் சுற்றுப் போட்டியில் நிந்தவூர் லகான்ஸ் விளையாட்டு கழகதிற்கு எதிராக போட்டியில் கல்முனை டொம் ரேங் விளையாட்டு கழகம் 2 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று கால் இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது.
32 விளையாட்டுக் கழகங்கள் பங்கேற்கும் இந்த சுற்றுப் போட்டியின் ஒரு அங்கமான இப்போட்டி சாய்ந்தமருது பொலிவேரியன் விளையாட்டு மைதானத்தில் இன்று ( 10 ) நடைபெற்றது.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கல்முனை டொப் ரேங் விளையாட்டு கழகம் களத்தடுபில் ஈடுபட்டது.
முதலில் துடுப்பெடுத்தாடிய நிந்தவூர் லகான்ஸ் விளையாட்டு கழகம் 15 ஓவர்களில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்கு துடுப்பாடிய கல்முனை டொப் ரேங் விளையாட்டு கழகம் 14.4 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்து 101 ஓட்டங்களைப் பெற்று 2 விக்கட்டுக்களினால் வெற்றிபெற்று கால் இறுதி சுற்றுக்கு தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டியின் சகலதுறை ஆட்டக்காரராக கல்முனை டொப் ரேங் விளையாட்டு கழகத்தைச் சேர்ந்த முஹம்மட் சிரோஸ் தெரிவு செய்யப்பட்டார்.
ஏற்கனவே காலிறுதிச்சுற்றுக்கு கல்முனை லெஜன்ஸ் விளையாட்டுக்கழகம் , கல்முனை ஜிம்கானா விளையாட்டுக்கழகம் , சம்மாந்துறை விளையாட்டுக் கழகம் , சாய்ந்தமருது பிளாஸ்டர் விளையாட்டுக்கழகம் ஆகியன தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இப்போட்டிக்கு ஓய்வுபெற்ற சிரேஸ்ட ஆசிரியர் எம்.ஐ.எம்.அஸ்ஹர் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
0 comments :
Post a Comment