கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்ட அஹமத் சிபாக் அப்றின் வீடு சென்று கௌரவிப்பு !



எம்.என்.எம். அப்ராஸ்-
ல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி வங்கிச் சங்க சிரேஷ்ட உதவி முகாமையாளராக கடமையாற்றும் எம்.எம்.எம்.மன்சூரின் புதல்வன் எம்.எம்.அஹமத் சிபாக் அப்றின் கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமயிலான சமுர்த்தி பிரிவு உத்தியோத்தர்கள் குழுவினரால் கெளரவிக்கப்பட்டார்.

கல்முனைப் பிரதேச செயலகப் பிரிவில் சமுர்த்தி வங்கிச் சங்க சிரேஷ்ட உதவி முகாமையாளராக கடமையாற்றும் எம்.எம்.எம்.மன்சூரின் புதல்வன் எம்.எம்.சிபாக் அப்றின் மருத்துவபீட கற்கை நெறிக்காக வயம்ப பல்கலைக்கழகத்திற்கு தெரிவு செய்யப்பட்டமையினைப் பாராட்டி கௌரவிக்கும் முகமாக கல்முனைப் பிரதேச செயலாளர் ஜே.லியாக்கத் அலி தலைமையில் ,கல்முனைப் பிரதேச செயலக சமுர்த்தி தலைப்பீட சிரேஷ்ட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் ,சமுர்த்திப் பிரிவில் கடமையாற்றும் சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களான என்.எம்.நௌசாத், ஏ.எஸ்.எம்.ஜௌபர் மற்றும் ஏ.கமால்தீன் ஆகியோர் சிரேஷ்ட உதவி முகாமையாளர் எம்.எம். எம்.மன்சூர் அவர்களின் சாய்ந்தமருதில் உள்ள வீட்டுக்கு நேற்று (09)பிற்பகல் சென்று அவரின் புதல்வர் எம்.எம். அஹமத் சிபாக் அப்றினுக்கு பிரதேச செயலாளர் தலைமயிலான குழுவினர் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டதுடன் நினைவு சின்னம் வழங்கி பொன்னாடை போர்த்தி கெளரவிக்கப்பட்டார் .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :