பெண்களின் சமத்துவத்தைப் பாதுகாக்கும் ஜனநாயகம் நம்மிடம் இல்லை.



ந்த நாட்டில் ஆண், பெண் சமத்துவப் பிரச்சினை உள்ளது. அதுதான் ஜனநாயகம் தொடர்பான பிரச்சனையாகும். ஜனநாயகம் என்றால் அனைவரும் சமம். நாம் அனைவரும் ஜனநாயகத்தை பாராட்டுகிறோம். ஜனநாயகம் என்பது நம் அனைவரினதும் சமத்துவமாகும். நம் அனைவருக்கும் வாக்குரிமை உண்டு. தேர்தல் காலங்களில் பெண்களுக்கு அதிக வரவேற்பும் முன்னுரிமையும் வழங்கப்படுகிறது. தேர்தலுக்குப் பிறகு அந்த நிலைமையை மறந்து விடுகின்றனர்..

அதன்படி, பெண்கள் மற்றும் ஆண்களுக்கு இடையில் சமத்துவம் இருப்பதை பலர் ஏற்றுக்கொள்ள விரும்பவில்லை. தேர்தலில் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படுகின்றது. எனவே, இலங்கையில் ஜனநாயகம் சரியாக நிலைநாட்டப்படவில்லை என்றே கூறுவேன். ஐரோப்பாவைப் போன்று இலங்கையில் பெரிய ஜனநாயக எழுச்சி எதுவும் ஏற்படவில்லை. அந்த மாற்றம் இலங்கையில் மிக மெதுவாகவே நடக்கிறது.
அதனால்தான் நம் நாட்டில் பெண்கள் இன்னும் இந்த ஏற்றத்தாழ்வை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. ஐரோப்பிய நாடுகளில் இந்த நிலைமை இல்லை என நீர் வழங்கல் அமைச்சர் கௌரவ வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு ஜனநாயக இடதுசாரி முன்னணியின் லிய அபிமானி பெண்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விசேட கருத்தரங்கில் அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது,
நம் வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்ய நாம் தாங்க வேண்டிய துன்பங்களின் அளவு குறையும்போது, நம் சொந்த முன்னேற்றத்தை நாங்கள் நம்புகிறோம். இந்த வாழ்க்கைப் போராட்டத்தின் போது நாம் பட்ட துயரம் இந்த போராட்டத்தின் முடிவாகும் என்பதே பெண் விடுதலையாக அன்று விதைக்கப்பட்டது. அதன்படி, பெண்களின் கடின உழைப்பு, ஆற்றல் மற்றும் அர்ப்பணிப்புக்கு தகுதியான மதிப்பைக் கருத்தில் கொண்டு மார்ச் 8 சர்வதேச மகளிர் தினமாக அறிவிக்கப்பட்டது.
இங்கு ஒரு விசேட விடயத்தை நினைவுபடுத்த வேண்டும். அதுதான் "சமூக கருத்து". ஒரு நாட்டிற்கு சமூகப் பார்வைகள் மிகவும் முக்கியம். சில நேரங்களில் சமூக கருத்து மிகவும் ஆபத்தானது. ஒரு காலத்தில் வோட்கா குடித்தால் அழகாக இருக்கும் என்ற சமூக நம்பிக்கை இருந்தது. இது கடுமையான சமூகப் பேரழிவை ஏற்படுத்தியது. பிசாசின் பிரதிநிதியாக பெண்களுக்கு பைத்தியம் பிடிக்கிறது என்று ஐரோப்பியாவில் நம்பிக்கை இருந்தது. அது பிசாசின் தூண்டுதலால் ஆட்கொள்ளப்பட்டது என்ற சமூக கருத்து இருந்தது. இறுதி முடிவு என்னவானது பெண்களை தீயிட்டு கொன்றனர்.
இவ்வாறு, ஒரு சமூகக் கருத்தில் பல துன்பகரமான மற்றும் ஆபத்தான சூழ்நிலைகள் எழாமல் இல்லை.இந்நிலைமையால் அதிகம் பாதிக்கப்படுவது நமது பெண்களே என்பதுதான் இங்கு உண்மையான சோகமாகும் எனவே பெண் விடுதலை எமது பெண்களுக்கு இன்னும் கிடைக்கவில்லையா என்பது எமது சமூகத்திற்குள் கேட்கப்பட வேண்டிய கேள்வியாகும்.
எனவே சகவாழ்வின் அடிப்படை பெண்களாகும்.
அப்படியென்றால் இந்த நாட்டில் நம் கலாச்சாரத்தில் பெண்களுக்கு நம் சமூகத்தில் எந்தளவு வரவேற்பு இருக்கிறது? எவ்வாறாயினும், சமத்துவம் மற்றும் ஜனநாயகத்தில் அந்த நிலைமை இன்மையே தற்போது எழுந்துள்ள பிரதான பிரச்சினை எனவும் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் வைத்தியர் ஜானகி விதானபத்திரன, ஜனநாயக இடதுசாரி முன்னணியின் மாவட்ட செயலாளரும் லிய அபிமானி பெண்கள் அமைப்பின் தலைவியுமான காந்தி லங்கா வருசவிதான, இரத்தினபுரி பிரதேச சபை உறுப்பினர் திருமதி நிலாந்தி அமரகோன் உட்பட பெண் பிரதிநிதிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :