கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளர் மன்சூருக்கு சாய்ந்தமருதில் பாராட்டு விழா!



பைஷல் இஸ்மாயில் -
கிழக்கு மாகாண பிரதி பிரதம செயலாளராக (நிர்வாகம்) நியமிக்கப்பட்டுள்ள சிரேஷ்ட நிர்வாக அதிகாரி ஏ.மன்சூருக்கு சாய்ந்தமருது போரத்தின் ஏற்பாட்டில் பாராட்டு விழா (06) ஞாயிற்றுக்கிழமை அல்-ஹிலால் வித்தியாலய கூட்ட மண்டபத்தில் காலை 11.00 மணிக்கு இடம்பெறவுள்ளது.

சாய்ந்தமருது பலநோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற நிர்வாக உத்தியோகத்தருமான எம்.எம்.உதுமாலெவ்வை தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் பிரதம அதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.

இந்நிகழ்வுக்கு பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினரும் முன்னாள் சாய்ந்தமருது பிரதேச செயலாளருமான ஏ.எல்.எம்.சலீம், சாய்ந்தமருது பிரதேச செயலாளர் எம்.எம். ஆஷிக் ஆகியோர் கெளரவ அதிதிகளாகவும் சாய்ந்தமருது- மாளிகைக்காடு ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல் தலைவர் அல்-ஹாஜ் ஏ.ஹிபத்துல் கரீம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர்கள் சங்கத் தலைவர் கலாநிதி எம்.எஸ்.எம்.முபாறக், சாய்ந்தமருது அல்-அமானா நற்பணி மன்றத்தின் தலைவர் அல்-ஹாஜ் ஏ.எல்.ஏ. பரீட், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் ஆகியோர் விஷேட அதிதிகளாகவும் மற்றும் அம்பாறை மாவட்ட பிரதேச செயலாளர்கள், திணைக்கள உயர் அதிகாரிகள், பாடசாலை அதிபர்கள் என பலரும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் பிரதி பிரதம செயலாளர் ஏ.மன்சூர் சாய்ந்தமருது பிரதேச செயலாளராக சேவையாற்றியதை நினைவு கூர்ந்தும் தற்போது உயர் பதவியொன்றிக்கு நியமனம் பெற்றதையிட்டும் சாய்ந்தமருது போரம், சாய்ந்தமருது ஜூம்ஆப் பெரிய பள்ளிவாசல், பலநோக்கு கூட்டுறவுச் சங்கம், சாய்ந்தமருது - மாளிகைக்காடு வர்த்தகர்கள் சங்கம், சிலோன் மீடியா போரம், அல்-அமானா நற்பணி மன்றம் ஆகிய அமைப்புக்கள் பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம், நினைவுப் பரிசு என்பன வழங்கி கெளரவிக்கவுள்ளன.

இந்நிகழ்வில் கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :