மக்களாட்சியை பாதுகாக்க, பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் ஒற்றுமை அணிவகுப்பு ! தாம்பரத்தில் நாளை நடைபெறுகிறது !!



05 மார்ச் / சென்னை : நாட்டின் மக்களாட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக, சென்னை மண்டல பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் நாளை மார்ச் 06 அன்று தாம்பரத்தில் ஒற்றுமை அணிவகுப்பு மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது என சென்னை மண்டல பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் ஓ.எம். பக்கீர் முகம்மது தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நமது நாடு 75 ஆண்டு கால சுதந்திரத்தை கொண்டாட உள்ள சூழலில், வறுமை, சாதிய ஒடுக்குமுறை, வகுப்புவாதம், சமூக மற்றும் பொருளாதார சமத்துவமின்மை, மோசமான கல்வியறிவு, சுகாதாரமற்ற நிலை, சிறுபான்மையினரின் உரிமைகள் மறுக்கப்படுதல், மத வெறுப்பு பிரச்சாரம், ஊடக சுதந்திரத்தில் அதிகார தலையீடு என நாடு பல பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகிறது. நாட்டின் ஜனநாயகத்தை சூழ்ந்துள்ள இத்தகைய ஆபத்துகளையும், எதேச்சதிகாரத்தையும் எதிர்த்து, அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக நிறுவனங்களைப் பாதுகாத்து, மக்களாட்சியை உறுதி செய்வது என்பது மக்கள் சக்தியினால் மட்டுமே சாத்தியப்படும் என பாப்புலர் ஃப்ரண்ட் கருதுகிறது.
எனவே “மக்களாட்சியை பாதுகாப்போம்” என்ற தேசிய அளவிலான பிரச்சாரத்தை, கடந்த ஜனவரி 26 குடியரசு தினத்தன்று இந்திய நாட்டின் ஒரு முனையான தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் துவங்கியது. நாட்டின் 75 ஆவது சுதந்திர தினமான ஆகஸ்ட் 15 வரை பேரணிகள், பொதுக் கூட்டங்கள், மாநாடுகள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகள் மூலமாக நாடு முழுவதும் இப்பிரச்சாரம் நடைபெற உள்ளது.

அதன் ஒரு பகுதியாக சென்னை மண்டல பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக 'மக்களாட்சியை பாதுகாப்போம்' எனும் தலைப்பில் நாளை மார்ச் 6ஆம் தேதியன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணியளவில் தாம்பரம் காந்தி சிலை அருகில் பேரணியுடன் கூடிய ஒற்றுமை அணிவகுப்பும், அதனை தொடர்ந்து சண்முகம் சாலையில் பொதுக்கூட்டமும் நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் தலைவர்கள் சிறப்புரையாற்றுகின்றனர்.
எனவே சமூகத்தின் அனைத்து தரப்பினரும் குடும்பத்தோடு திரளாக கலந்து கொண்டு நமது நாட்டின் மக்களாட்சியை பாதுகாக்க நடைபெறுகின்ற இந்நிகழ்ச்சியை சிறப்பித்து தர வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :