இறக்காமம் முஹர்ரம் முன்பள்ளிப் பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப தின நிகழ்வு



நூருள் ஹுதா உமர்-
2022 ஆம் ஆண்டு புதுவருடத்திற்கான முன்பள்ளிப் பாலர் பாடசாலைகளின் வித்தியாரம்ப தின நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன. இறக்காமம் பிரதேசத்தில் காணப்படும் முன்பள்ளிப் பாலர் பாடசாலைகளின் வித்தியாரம்ப நிகழ்வுகளும் சிறப்பாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இறக்காமம் பிரதேச ஆயிஷா முன்பள்ளிப் பாலர் பாடசாலையின் வித்தியாரம்ப நிகழ்வு இன்று புதன்கிழமை இடம்பெற்றது.

சது-மதீனா வித்தியாலய அதிபர் எம்.ஐ. ஜௌபர் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்விற்கு பிரதேச செயலாள எம்.சி.எம். ரஷ்ஷான் (நளீமி) பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் கௌரவ அதிதிகளாக பிரதேச செயலக பெண்கள் மற்றும் சிறுவர் அபிவிருத்திப் பிரிவில் கடமைபுரியும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம்.இம்டாட், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர் எம்.எச்.வஹாப், உளவளத்துணை உத்தியோகத்தர் ஏ.எச். றகீப், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர் எஸ்.எல். ஸபூறுல் ஹஸீனா, மற்றும் பெண்கள் அபிவிருத்தி வெளிக்கள உதவியாளர் திருமதி எஸ்.எப். றிஸ்மியா ஜஹான், ஆசிரையை திருமதி றபீஷா ஜௌபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வானது முன்பள்ளிப் பாலர் பாடசாலை ஆசிரியை திருமதி ஏ. ஆகிலா நுஸ்கி அவர்களினதும் இறக்காமம் பெண்கள் அமைப்பின் ஒழுங்கமைப்பிலும் மிகவும் சிறப்பான முறையில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :